Monday, August 14, 2017

452. தூயாதி தூயவரே உமது புகழை

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் 
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் 
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி 

1. சீடரின் கால்களைக் கழுவினவர் 
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! 

2. பாரோரின் நோய்களை நீக்கினவர் 
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! 

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே 
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! 

4. பரலோகில் இடமுண்டு என்றவரே 
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

442. உங்க கிருபை தான் என்னைத்

உங்க கிருபை தான்
என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபை தான்
என்னை நடத்துகின்றது

கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே

1.உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது

2.சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

3.ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது

4.ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்தக் கிருபை இது

Sunday, August 13, 2017

434. இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2) 

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை 
ஏழை இல்லை பணக்காரனில்லை 
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் --- இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை 
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் --- இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் --- இயேசுவின்

436. கர்த்தரின் கை குறுகவில்லை

1. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

பல்லவி

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

2. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே

3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே

4. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே