Friday, August 25, 2017

476. துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் --- துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் --- துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் --- துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் --- துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் --- துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் --- துதி

472.ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்துபாடிடுவோம்

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்துபாடிடுவோம்

வல்ல இயேசு நல் தேவன்என்றென்றும் அவர் நம் தேவன்

1.தேவ வாசஸ்தலம் என்றும்இன்பமானதே

மகிமை தேவன் கிறிஸ்து இயேசுபிரசன்னம் இங்கே

மகிமை மகிமையே! என் மனம்பாடுதே மக்கள் மத்தியில்

என் மகிழ்ச்சி பொங்குதே!

2.சீயோன் பெலனே! வெற்றிசிகரமே!

சேனைகளின் கர்த்தர் இயேசுகிரியை செய்கிறார்

ஜீவன் பெலனும் ஆசீர்வாதமேநித்திய ஜீவன்

இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே!

3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின்மேன்மையே

கர்த்தர் இயேசு ராஜன் என்றும்உயர்ந்து நிற்கிறார்

அல்லேலூயா என் ஆவி பாடுதேஆராதனை

அழகு என்னை கவர்ந்துகொண்டதே!

4.தேவ சாயல் சபையில் தோன்றுதே

தேவர் நடுவில் இயேசு நியாயம்செய்கிறார்

தேவ சேவையே என் கெம்பீர சேவை

தேவாவியில் நிறைந்துஆடிப்பாடுவேன்

Wednesday, August 23, 2017

469. ஆராதனை நாயகன் நீரே

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

சரணங்கள்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசுவிலே
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

467. அழைக்கிறார் அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார் இதோபல்லவி அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் - இதோ 
சரணங்கள்
1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர் கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் --- அழைக்கிறார்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர் நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் --- அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ --- அழைக்கிறார் 

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ --- அழைக்கிறார்

5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே --- அழைக்கிறார்

6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் --- அழைக்கிறார்

Tuesday, August 22, 2017

466. மேகமீதில் இயேசு ராஜன்

மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாராரே மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே - 2

ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் -
மேகமீதில்

கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே -மேகமீதில்

பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர்தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் -மேகமீதில்

அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் -மேகமீதில்

ஆயிரமாயிரம் அவரது வசனங்கள் அதை அறிவிக்கின்றதே அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம் அதையே அறிவிக்கின்றார் -மேகமீதில்

Monday, August 21, 2017

463. ஜீவனுள்ள தேவனே வாரும்

1.ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும் 
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும் 

தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்

2.பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

3.ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயம் ஏற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

4.வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

5.நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வரக் காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Sunday, August 20, 2017

456. ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

வாழ்த்தி வணங்கிடுவேன்

1.அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே - ஸ்தோத்தி

2.ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே - ஸ்தோத்தி

3.மாய உலக அன்பை - நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - ஸ்தோத்தி

4.ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே - ஸ்தோத்தி

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - ஸ்தோத்தி

453. அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

  முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
  முழு பெலத்தோடு அன்பு கூறுவென்
     ஆராதனை ஆராதனை - 2

1. எபிநெசரே எபிநெசரே
  இதுவரையில் உதவினீரே ‍ உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
  என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை

3. யோகோவா ராப்பா யோகோவா ராப்பா
  சுகம்தந்தீரே நன்றி ஐயா – உம்மை

455. கோடாகோடி ஸ்தோத்திரம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்