Thursday, June 22, 2017

136. கலங்காதே கலங்காதே கர்த்தர்

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் கலங்காதே கலங்காதே

முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு - நீ பரிசுத்தமாகி விடு ...கலங்காதே
கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ ...கலங்காதே

காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை ...கலங்காதே

உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ) மறைவாக இருக்காதே ...கலங்காதே

உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் ...கலங்காதே

உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கக் தேவையில்லை விசுவாசி அது போதும் ...கலங்காதே r

134. என் இயேசு ராஜாவுக்கே

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் (ஆ…..ஆ)

3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – நான்

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே (ஆ…..ஆ)

133. வெற்றிக் கொடி பிடித்திடுவோம்

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்

1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே

2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்

3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம

143. விடுதலை நாயகன்

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

142. ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கொடி கொடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

1. நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன்

2. அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார்

3  நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பார்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார்

4  உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பார்
உறங்குவதில்லையே

Wednesday, June 21, 2017

132. கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[1]
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலை கேட்டு விடுதலைக் கொடுத்தார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[2]
எனக்கு உதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[3]
எனது பெலனும் எனது மீட்பும் கீதமும் ஆனார்
நம்பி இருக்கும் கேடையமும் கோட்டையும் ஆனார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[4]
கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை
கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[5]
வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்கு செய்தாரே
உயிரோடு இருந்து உலகத்திற்க்கு எடுத்து சொல்லுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் [5]

131. நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் - அல்லேலூயா
 
1.   காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா
 
2.   வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக - ஐயா
 
3.   ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம்தான் உண்டு - ஐயா
 
4.   அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே

130. உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்


உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன் 
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன் 
  
1.   கால்கள் தள்ளாட விடமாட்டார் 
காக்கும் தேவன் உறங்கமாட்டார் 
இஸ்ரவேலைக் காக்கிறவர் 
எந்நாளும் தூங்க மாட்டார் 
  
2.   கர்த்தர் என்னைக் காக்கின்றார் 
எனது நிழலாய் இரக்கின்றார் 
பகலினிலும் இரவினிலும் 
பாதுகாக்கின்றார் 
  
3.   கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும் 
விலக்கி என்னைக் காக்கின்றார் 
அவர் எனது ஆத்துமாவை 
அநுதினம் காத்திடுவார் 
  
4.   போகும்போதும் காக்கின்றார் 
திரும்பும்போதும் காக்கின்றார் 
இப்போதும் எப்போதும் 
எந்நாளும் காக்கின்றார்

Tuesday, June 20, 2017

129. குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அப்பாவின் திருப்பாதத்தில்

1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

127. நேசரே உம் திரு பாதம்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை

126. ஒப்புக்கொடுத்தீர் ஐயா

ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க 
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற 
நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் 
சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே 
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா 
உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து 
நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே 
என் பாவம் சுமந்தீரையா

5. என்னையே தருகிறேன் 
ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் 
உடலைத் தருகிறேன்

Monday, June 19, 2017

125. கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன்

யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...கர்த்தர் நாமம்

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ...கர்த்தர் நாமம்

யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...கர்த்தர் நாமம்

யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ...கர்த்தர் நாமம்

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...கர்த்தர் நாமம்

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ...கர்த்தர் நாமம்

123. ஊற்றுத் தண்ணீரே எந்தன்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே --- ஊற்று

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட --- ஊற்று

3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட --- ஊற்று

4. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புதுபெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே --- ஊற்று

Sunday, June 18, 2017

120. நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2)
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் - (2)

1.   பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

2.   திகையாதே கலங்காதே மனமே - நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
கலலைகள் யாவையும் போக்கிடுவேன்

3.   அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

4.   நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியின் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்