Saturday, September 23, 2017

500. ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும்

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Friday, September 22, 2017

29. ஆனந்தமாய் இன்பக்

ஆனந்தமாய் இன்பக் கானான்பல்லவிஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் 
அனுபல்லவிநாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார் 

சரணங்கள்
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்கண்டு நன்றியுடன் பாடிடுவேன் --- ஆனந்தமாய்

2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் --- ஆனந்தமாய்

3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லைஎன்றும் எனக்கவர் ஆதரவே --- ஆனந்தமாய் 

4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்துஉம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபைகண் பாரும் என்றும் நான் உம் அடிமை --- ஆனந்தமாய்

5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னைஆற்றிடுதே உந்தன் சமூகமேபெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் --- ஆனந்தமாய்