நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)
1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2) நன்றியால்
2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால்
3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால்
3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
துதி சத்ததால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் - நன்றியால்
No comments:
Post a Comment