Monday, September 04, 2017

479.தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம்மகிமையோடிறங்க

1.எழும்பு சீயோனே ஒளி வந்ததே
 எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே

2.நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் பரமனைவாழ்த்திடுவோம்

3.குறித்திடும் வேளைஉயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில்அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திடவாய்திறப்போம்

4.தெரிந்தெடுத்தார் தம்மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் நாம்பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன்வாழ்ந்திடுவோம்

No comments:

Post a Comment