தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் .
ஊற்றும் ஐயா உம் வல்லமையை தாகத்தோடு காத்திருக்கிறேன் நான் .
1. மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டுமே மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே .
2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே .
3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும் .
4. புதிய கூர்மையான கருவியாகணும் பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும் .
5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் .
6. வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும் வயல்வெளி அடர்ந்த காடாகணும் .
7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே .
8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும் எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்
No comments:
Post a Comment