Friday, October 14, 2016

21 உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

உறக்கம் தெளிவோம்
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்!

அசுத்த்ம் கழைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க ந்ம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்!

அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த்ச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம்!

கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
ந்ஷ்ட்டப்பட்டதில்லை!

உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்.

No comments:

Post a Comment