1.
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ…ஆ…ஆனந்தமே
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே – இந்த
2.
சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
துரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜவனை எனக்கும் அளித்து
ஜவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்– இந்த
3.
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும்வரை காத்துக் கொள்வேன்– இந்த
4.
அவர் வரும் நாளில் என்னைக் கரம் அசைத்து அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்– இந்த
Wow what a song , what a touching lyrics ... Thank Almighty..
ReplyDelete