Saturday, November 05, 2016

92 தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச

தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கி சேர்வதே
என் ஆவல் பூமியில் – 2

மாவலிய கோரமான
வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம் அண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி உம்மைக் கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா வல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்ற
பண்ணுமையா எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாக என்னைச் சேர்க்கும்
அன்பின் தூதனாகச் செய்யும்

3. நித்திரையினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர் கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

4. ஆனந்தமாய் செட்டை விரித்து
பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மை கிட்டிச் சேர்வேன்

No comments:

Post a Comment